panang kilangu benefits in tamil “இயற்கை உணவே மருந்து” வணக்கம் நண்பர்களே, நாம் இந்த பதிவில் பனங்கிழங்கின் மகத்துவத்தை பற்றி பார்க்கலாம்.இயற்கையானது நமக்கு பலவகையான சத்து நிறைந்த உணவு பொருட்களை தருகிறது.அதில் ஒன்று தான் இந்த பனங்கிழங்கு.
நாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு, இளம் மஞ்சள் நிறமான, நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதால், சத்திமுற்றப்புலவர் எனப்படும் சங்ககாலப் புலவர் ஒருவர் நாரையின் அலகுக்கு உவமையாகப் பனங்கிழங்கைப் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.
“நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்” ….
பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.வாங்க அதனோட நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
கிழங்கு வகைகள்
- அரோட்டுக்கிழங்கு
- ஆட்டுக்கால் கிழங்கு இஞ்சி
- இராசவள்ளிக்கிழங்கு
- உருளைக்கிழங்கு
- கப்பை கிழங்கு
- கருணைக்கிழங்கு
- கேரட்
- கொய்லாக்கிழங்கு
- கொட்டிக்கிழங்கு
- கோகிலாக்கிழங்கு.
- கோசுக்கிழங்கு
- சேப்பங் கிழங்கு
- சேனைக்கிழங்கு
- தாமரைக்கிழங்கு
- பனங்கிழங்கு
- பீட்ரூட்
- மஞ்சள்
- மரவள்ளிக்கிழங்கு
- மாகாளிக் கிழங்கு
- முள்ளங்கி
- மோதவள்ளிக்கிழங்கு
- வத்தாளை கிழங்கு
- சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இந்த அனைத்து வகை கிழங்குகளும் மண்ணில் விளையகூடியவையாகும்.இவற்றில் நாம் பனங்கிழங்கு வகையை பற்றி பார்க்கலாம்.
பனங்கிழங்கு நன்மைகள் panang kilangu benefits in tamil
- பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன.
- ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினை சுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
- பனங்கிழங்கில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுவதால் இரத்த சோகை உள்ளவர்கள் இதை அடிக்கடி எடுப்பதன் மூலம் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.
- பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை பிரச்சினைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
- மேலும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.செரிமானமண்டலத்தை சீராக்கி உணவு செரிமானத்துக்கு உதவுகிறது.
- பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய் வராது என்பது பெரியோர்களின் கருத்து ஆகும்.
- மேலும் பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் இது உடல் உஷ்ணத்தை குறைத்து சீராக வைக்க உதவுகிறது.
- மேலும் பனங்கிழங்கை பொடி செய்து அதை பாலுடனோ இல்லை கூழ் செய்தோ சாப்பிடுவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலுக்கு தேவையான வலுவையும் கொடுக்கிறது.
பனங்கிழங்கு தீமைகள்
எதையுமே அளவாக சாப்பிடும்போது அதோட பயன்கள் நமக்கு முழுமையாகவே கிடைக்கின்றன.அதேபோல் தான் பனங்கிழங்கையும் அளவாகவும் சரியான நேரத்திலும் சாப்பிடுவது நல்லது.
அளவுக்கு மீறி சாப்பிடும்போது அதிலுள்ள நார்சத்து காரணமாக செரிமான
பிரச்சினை ஏற்பட்டு வாய்வுதொல்லை ஏற்படக்கூடும்.
குறிப்பு: பனங்கிழங்கை சாப்பிட்ட பிறகு 4 அல்லது மிளகு சேர்த்து கொள்வது வாய்வு தொல்லையில் இருந்து தடுக்கும்.
பனங்கிழங்கு குறிப்புகள் panang kilangu benefits in tamil
- பனங்கிழங்கு – Palmyra tube ஆங்கிலத்தில் இப்படி சொல்வார்கள்.பொதுவாகவே நாம் இந்த மாதிரி உணவுப்பொருட்களை வேகவைத்து சாப்பிடுவதை விட அதை சுட்டு சாப்பிடுவது நல்ல பயனை தரும்.
- ஏனெனில் அதனை நாம் அவிக்கும்போது அதிலுள்ள 40% சத்துக்கள் வெளியசெல்வதாக ஆய்வுகள் சொல்கின்றன.
- அப்படி செய்ய விரும்பாதவர்கள் அதனை வாங்கி நன்கு வெயிலில் காயவைத்து பின்பு பொடி செய்து அதனை பாலிலோ இல்லையென்றால் கூழ் மாதிரி செய்தோ சாப்பிடுவது உடலுக்கு நல்ல பயனை தருகிறது.
- மேலும்
நோய்எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கும்.
பனங்கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு
- சர்க்கரை நோய் என்பது நமது உடலில் நாம் சாப்பிடக்கூடிய உணவு பொருள்களில் உள்ள சர்க்கரை செரிமானம் அடையாமல் அப்படியே இரத்தத்தில் தங்கி விடுவதே ஆகும்.
- பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய் வராது என்பது பெரியோர்களின் கருத்து ஆகும்.இதில் காணப்படக்கூடிய வேதி பொருளானது தேவையான இன்சுலினை சுரக்க செய்கிறது.
- இரத்தத்தில் தங்கியுள்ள தேவையற்ற சர்க்கரையை கரைய செய்து உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க பயன்படுகிறது.
பனங்கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனை குக்கரில் வேக வைக்காமல் பாத்திரத்தில் வேகவைக்கவும்.அதனுடன் மஞ்சள் சேர்ப்பது மிகவும் ஹைஜீனிக்காக இருக்கும்.உப்பு தேவைப்பட்டால் சேர்க்கலாம்.பெரும்பாலும் மண்ணில் விளைவதால் உப்பு சத்து சிறிது காணப்படும்.
மற்றொரு முறை வேகவைப்பதோடு அதனை சுட்டு சாப்பிடுவதன் மூலம் அதனோட சுவையும் அதிகரிக்கும்.அதனின் சத்துக்களும் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.